படையினராலேயே யுவதி வல்லுறுவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Font size: Decrease font Enlarge font

தனங்களப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அதே இடத்தினை சுப்பிரமணியம் அற்புதமலர் என்பதுஉறிதி செய்யப்பட்டுள்ள அதே வேளை யுவதியைக் கடத்தி பலர் வல்லுறவுக்குட்படுத்திய பின்னரே கொலைசெய்துள்ளனர் என்றும் கொலை தொடர்பான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
தளங்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மண் அணை ஒன்றின் அருகாமையில் இருந்தே அப்பெண்ணின் எச்சங்கள் மீட்கப்பட்டது. அவ் பெண்ணின் எச்சங்கள் அங்கும் இங்குமாக சிந்தி விட்டது போல்அங்கொண்றும் இங்கொண்றுமாக காணப்பட்டது.இதற்கு காரணம் சடலத்தினை பண்றி போன்ற மிருகங்கள் உண்டுள்ளன. அதனாலேயே சடலத்தின் எச்சங்கள்அங்கும் இங்குமாக காணப்பட்டன. ஆனால் எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில்; வைத்து யுவதி கொலை செய்திருப்பதற்கானவாய்ப்புகள் இருக்காது. ஏனெனில் எச்சம் மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 120 மீற்றர் தூரத்தில் யுவதியினுடைய கால் பாதணி கண்டுபிடிக்கப் பட்டது. அப் பாதணி அங்குள பனை வடலி ஒன்றில் கொழுவிவைக்கப்பட்டு இருந்தது.கொலை செய்தவர்கள் கொலைக்காண ஆவனங்களைக் கொண்டுவந்து அங்கு போட்டுச் சென்றுள்ளனர். ஆவனங்களை அழித்துவிட்டு யுவதியின் பாதணியை அங்கோயே விட்டுச் சென்றுள்ளனர்.யுவதி கடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சம்மந்தப்பட்டிருந்தாலும் யுவதி பலரால் வல்லுறவிற்கு உட்படுத்தி உள்ளனர்என்று வைத்திய பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. எனவே வேறு இடத்தில் வைத்து யுவதியை வல்லுறவிற்கு உட்படுத்திகொலை செய்துவிட்டு சடலத்தை கொண்டு வந்து அணைக்கட்டிற்கு பக்கத்தில் போட்டுள்ளனர்.மேற்படிச் சம்பவத்தில் தனி மனிதனால் இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. மேற்படிப் பகுதிமுழுவதும்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மேற்படிப் பகுதியில் யார் புதிதாய்வந்தாலும் படையினருக்கு தெரியவந்துவிடும்.இந்த நிலையில் யுவதியைக் கடத்திக் கொண்டு சென்று பலர் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளகர் என்றால் அவ்விடையம் சாதாரண பொது மகனால் முடியாத காரியம். எனவே அரசியல் பின்னனி உள்ளது என்பதை மேற்படிக்கொலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. படையினராலேயே யுவதி வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்